tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. கப்பலுக்கு போன மச்சான் - தமிழின்பம் H

கப்பலுக்கு போன மச்சான்

காலம் : இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடின்னு வச்சிக்கலாம்
இடம் : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்

 
நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த நேரம், துபாயிலிருந்து சென்னை வந்திறங்கிய விமான பயணிகளை சுங்கத்துறை குடைந்துக்கொண்டு இருந்தது. ஒரு குடையை கூட விட்டுவைக்காமல் ‘விரித்து - பிரித்து’ மேய்ந்துக்கொண்டிருந்தார்கள், தேவையே இல்லாமல். வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு சந்தோஷமாக ஊருக்கு வந்தாலும், இந்த இடத்தை தாண்டிப்போவது என்னமோ பெரிய கண்டத்தை தாண்டுவதை போலவே இருக்கும். அதுவும் பெரிய பொட்டியை பார்த்துவிட்டால், சந்தோஷமாக கூப்பிட்டு ‘குடைவார்கள்’. அப்பிடி குடைய கூடிய ரெண்டு பெரிய பொட்டிகளோடும், இன்னும் சில சாமான்களோடும் நின்னுக்கிட்டு இருந்தான் சாகுல் ஹமீத், வயசு 26. துபாயில ஆறு வருஷமா வேலை செஞ்சு, ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை ரெண்டு மாச லீவுல ஊருக்கு வருவான். இப்பவும் அப்பிடிதான் ஆனா இந்த முற சந்தோஷமும் படப்படப்பும் அதிகமா இருந்திச்சு.
 

சந்தோஷம் என்னான்னா அவனுக்கு கல்யாணம், ஊருக்கு போய் ஒரு வாரத்திலேயே. அதான் பொட்டி பொட்டியா பொண்ணுக்கு தங்க சங்கிலி, நகை, வளையல், மேக்கப் சாமான், பொடவை, கொடை, செருப்பு வரைக்கும் வாங்கி வச்சிருந்தான். அவனுக்கு கண்ணாடியில் ஆரம்பித்து உள்ளாடை வரை எல்லாமே பொட்டிக்குள் இருந்தாலும், எங்கயோ ஒளித்து வைத்திருந்த சில பவுன் காசும், ரெண்டு ’தோலா’வும் சுங்க அதிகாரியின் கண்ணில் பட்டுவிடக்கூடாதேன்னு படப்படப்பும் கூடவே இருந்திச்சு. ஒரு வழியா, எல்லா ‘வாசலையும்’ சமாளிச்சு வெளியே வந்துட்டான்.
 
வெளியே திருவிழா மாதிரி ஜே.ஜே.ன்னு கூட்டம், ஒவ்வொரு ஆளையும் கூட்டிட்டு போவ ‘சுற்றம் சூழ’ கல்யாணத்துக்கு வர்ற மாதிரி வந்து குமிச்சிருந்தாங்க. வருபவரை வாரி அணைத்து அழுவதற்கு சில பேரு தயாரா இருக்க, கூட வந்த வாண்டுகள் எல்லாம் ஏறி - இறங்கும் ப்ளேன்களை ஆச்சிர்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. வாலிப வயசு கூட்டம் சிலது நவந்து போய் செட்டு போட்டு பயத்தோட திருட்டு தம்மும் கையுமா, போவுற பொண்ணுகள சைட்டும் கண்ணுமா, வர்ற ஆளுகளையெல்லாம் ‘நாம எப்ப இது மாதிரி போவோம்’ன்னு பொருமலும் ஏக்கமுமா பார்த்து நின்னுக்கிட்டு இருந்திச்சு. கம்பெனி ஸ்டிக்கர அரைக்குறையாக கிழிச்சு, திட்டுதிட்டா மிச்ச மீதி ஒட்டியிருந்த புது கைலிய மொடமொடப்பா கட்டிக்கிட்டு நசீரும் நின்னுக்கிட்டு இருந்தான், வரப்போற சாகுலு மச்சானை ஊருக்கு கூட்டிக்கிட்டு போவுறதுக்கு.
 
சாகுலுக்கு நசீர் மாமா மகன், கல்யாண பொண்ணுக்கும் தம்பி முறை. கல்யாண மாப்பிள்ளய பத்திரமா கூட்டிக்கிட்டு வீடு போய் சேர்க்கனுங்க்ற அக்கறயும், இன்னும் காணலயேங்குற கவலையும் சேர்ந்து, கொஞ்சம் பதட்டமாவே இருந்தான். வெளியே யாராவது வரும்போதெல்லாம், சாகுலா இருக்கும் எதிர்ப்பார்த்து ஏமாற்றத்தோட இருந்தவன் கண்ணுல, அப்பதான் சாகுலு தெரிஞ்சான். நசீரு பலமுற கைய அசைச்சும், சாகுலு பார்க்கல, சாகுலோட கண்ணு தெரிஞ்ச மொகத்த தேட, நசீரு கிட்டப்போய் தோள தட்டுனான். நசீர பார்த்த அடுத்த நிமிஷம், பொட்டிய அப்பிடியே விட்டுட்டு, கட்டிப்புடிச்சிக்கிட்டான். கொஞ்ச நேரம் அழுத்தி அணைச்சிக்கிட்டு, நெகிழ்ச்சியோட விலகினாங்க.
 
" டேய் நசீரு ! எப்புட்றா இருக்க ? "
 
" நல்லாருக்கேன் மச்சான். ஏன் மச்சான் இவ்ளோ நேரம் ?"
 
" ரொம்ப கூட்டம்ரா, ஒரு அட்டக்கோத்தா உடாம எல்லாத்தையும் பிரிச்சு பார்க்குறானுங்க. அதான் செத்த நேரமாயிரிச்சு. சரி, ஏண்டா வேற யாரும் வரல ? "
 
" எல்லா கல்யாண வேலைல அலைஞ்சிக்கிட்டு இருங்காங்க மச்சான். உம்மாவுக்கு வேற காலு வலி, ரொம்ப நேரம் கால தொங்கப்போட்டுட்டு காடில உக்காந்து வர முடியாது. எங்க வாப்பாவும் சீட்டு குடுத்துட்டு இருக்காக, அதான் நான் மட்டும் வந்தேன் "
 
" ஒன் லாத்தாவ கூட்டிட்டு வரவேண்டியதுதானடா "
 
" ஏன் மச்சான், துபாய்ல போய் கிறுக்கு புடிச்சிருச்சா ? கல்யாணப் பொண்ண எப்பிடி கூட்டிட்டு வர்றது " என்று செல்லமாக கடிந்தான் நசீர். தொடந்தான்,
 
" சரி, சரி வா போலாம்" என்று ரோத வச்ச அந்த பொட்டிய தள்ளிக்கிட்டு நடந்தான்.
 
" பத்தரம்டா ! முக்கியமான ‘சாமான்’லாம் இருக்கு " என்று பொட்டியில் ஒரு கையை சாகுலும் வச்சிக்கிட்டான்.
 
ஒரு வெள்ளை ப்லெசர் கிட்டப்போனவுடன், உள்ளேர்ந்து ரெண்டு பேரு இறங்குனானுங்க. பொடிப்பயலா இருந்த ஒருத்தன், பொட்டிய வாங்கி சுறுசுறுப்பா டிக்கியின் உள்ளே அடுக்கினான்.
 
" நசீரு ! யார்ரா இவன் ? சின்ன பயலா இருக்கான், இவனா வண்டி ஓட்டப்போறான் ? " சாகுல் கேட்டான்
 
" இல்ல மச்சான், இவன் க்ளீனரு. டிரைவர் நம்ம சேட்டுதான் " என்று இன்னொருவனை காட்ட, அவன் சிரித்து வைத்தான். கூடுதலா காசு குடுப்பான் என்ற நம்பிக்கை சேர்ந்து டிரைவரை மேலும் ‘இளித்தவாயனாக்கியது’
 
" ஒலகத்துலேயே காருக்கு க்ளீனர் வச்சிக்கிற பழக்கம், நம்ம ஊர் பக்கம் தாண்டா இருக்கும் " என்று சிரித்துக்கொண்டே சாகுல் உள்ளே ஏறி உக்கார, வண்டி சில வினாடிகள் மக்கார் செய்து, குண்டு போட்ட பூமி மாதிரி அந்த இடத்தையே புகையால் கருப்பாக்கி, பின்னர் குலுங்கி கிளம்பியது.
 
" ஏன் சேட்டு, வண்டி ரொம்ப கண்டிஷனா வச்சிருக்கே போல இருக்கே " என்று குதர்க்கமா சிரிச்சிக்கிட்டே சாகுலு கேட்டான். குதர்க்கம் புரியாமல் சேட்டு,
 
" ஆமாண்ண ! போன வாரந்தான் நாகப்பட்டினம் போயி இஞ்சின எறக்கி வேல பார்த்தேன் " என்று திரும்பி பார்க்காமல் இளித்தான்.
 
நசீரும் சாகுலும் ஜாடையா பார்த்து சிரித்துக்கொண்டார்கள். அப்புறம், கார் போக போக நசீரும் சாகுலும் ஊர்க்கதையெல்லாம் பேசிக்கிட்டே போனாங்க. இடையே திறந்திருந்த ஒரு கடையில் நிறுத்தி, சாப்பிட்டுவிட்டு சூடாக ஆளுக்கொரு டீயை குடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தார்கள்.
 
சாகுல் கொஞ்ச நேரத்தில் தூங்கிட்டான், ‘தூங்காம வண்டிய பத்திரமா ஓட்டிட்டு போ’ன்னு டிரைவர்கிட்ட சொல்லிட்டு நசீரும் தூங்கிட்டான். பேச்சு நின்ன சந்தோஷத்தில, டேப்பு சவுண்ட ஒரு பங்கு கூட வச்சான் க்ளீனர் பொடியன், வண்டியும் அதுக்கேத்த மாதிரி வேகம் கூடிப்போச்சு.
 

பொழுது லேசாக புலர ஆரம்பிக்க, நாகப்பட்டினம் கூட்டுரோட்டில் வண்டி லேசாக நின்றது. திரும்ப சென்றது. யாரோ எழுப்புன மாதிரி சாகுல் முழிச்சிக்கிட்டான். சோம்பல் முறிச்சிக்கிட்டே, டிரைவர் சேட்டிடம்,
 
" ஊரு கிட்ட வந்தாச்சா ! வேகமா ஓட்டுனியா ? " என்று சாகுல் கேட்க, நசீரு தூங்கிட்டு இருந்த நம்பிக்கையில் ‘ஆமாண்ணெ’ என்று பெருமிதமா சிரிச்சான் சேட்டு.
 
நாகை டவுன் அருகே கூட்டுரோட்டை தாண்டி சென்று, வளைந்து வண்டி மண்ரோட்டில் இறங்கியது. சட்டென்று இருபுறமும் வயல்வெளி நிறைந்த பசுமை சூழ்ந்துக்கொண்டது. பாதி இறங்கியிருந்த கதவின் கண்ணாடிய, முழுசா இறக்கிவிட்டு வயல்வெளிகளை அதிசயம் போல வேடிக்கை பார்த்தான்.
 
அதிகாலை நேரத்தில் பனிப்பெய்து, சில்லென்ற மண்வாசனையுடன் சேர்ந்த குளிர்ந்த காற்று அவன் மூக்கு, காது வழியாக தொண்டைக்குள் இறங்கி, நெஞ்சு முழுக்க பரவியது. ’ஈரமண்ணுக்குதான் எவ்ளோ வாசனை’ என்று பலமாக பலமுறை மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டான். அஞ்சு ஹால்ஸ் முட்டாய் ஒரே நேரத்தில் தின்னாலும், இந்த குளிர்ச்சி கிடைக்காது. பனித்துளி பட்டு ஈரமாகியிருந்த வயல்வெளிகளை பார்த்தான், ஜில்லு தண்ணிய கண்ணுக்குள் சொட்டு மருந்தா விட்டது மாதிரி ஒரு குளிர்ச்சி. அதை, புலர்ந்தும் புலராத அதிகாலை நேர வெளிச்சத்தில் பார்ப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி.

ம்ஹூம் ! திரும்பிய பக்கமெல்லாம் பாலைவனமாகவும், கற்பாறைகளுமா துபாயில் பார்க்கும் நேரமெல்லாம், எங்க நாடு எப்பிடி பசுமையா இருக்கும் தெரியுமான்னு மனசுக்குள் பலமுறை நினைச்சு பெருமை அடைஞ்சிக்கிட்டது ஞாபகத்துக்கு வந்தது. வண்டி வேகமாக போக, காற்று கிழித்துக்கொண்டு தன்மேல் பட்டு ஜில்லாவதை ரசித்துக்கொண்டிருந்தான், அதேநேரம், குளிர்காத்து பட்டு சட்டுன்னு முழிச்சான் நசீரு.
 
" கிட்ட வந்துட்டோமா ? டேய் சேட்டு, ஏண்டா இவ்ளோ விரைசலா ஓட்டுனே "ன்னு லேசா திட்டிக்கிட்டே, நேரா உட்கார்ந்து திரும்பவும் கண்ணை முடிக்கிட்டான்.
 
இந்த ஊரிலேயே இருக்கிறவனுக்கு இதோட அருமை தெரியாதுன்னு சாகுல் நசீரை எழுப்பாம, வேடிக்கையை தொடர்ந்தான். அவன் ஊரின் எல்லைக்கு இன்னும் இரண்டு கிலோமீட்டர் இருக்க, சாகுலுக்கோ இந்த இடத்தை நெருங்கும்போதெல்லாம், ஊருக்குள்ளேயே வந்துவிட்ட மாதிரி ஒரு சந்தோஷமும், வீடு இன்னும் வரலையான்னு ஒரு பரிதவிப்பும் வந்துரும். அங்கிருந்து இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ளாகவே ஊருக்குள் போயிடலாம் ஆனாலும் நிமிஷத்துக்கு ஒரு தடவை மணியை பார்த்துக்கிட்டே இருந்தான். கண்ணில் தென்படும் ஒவ்வொரு விஷயத்தை ஆர்வத்தோடு பார்த்தான், மனதில் சிறுப்பிள்ளையாகி. எல்லா மைல்கல்லுக்கும் இடையேக்கூட அவனுக்கு ஒரு ‘மலரும் நினைவு’ இருந்தது.
 
வண்டி ஊருக்குள் நுழைய, நசீரை எழுப்பிவிட்டான், பதறி எழுந்தவன் வாயிலிருந்து ஒழுகிய எச்சிலை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். கடைத்தெரு வழியாக வண்டிப்போக, டீக்கடையில் நின்று இருந்த கூட்டம் எல்லாம் உற்று நோக்கி, வண்டிக்கு உள்ளே யாருன்னு கண்டுப்பிடித்துக்கொண்டிருந்தார்கள். கண்டுப்பிடித்த புத்திசாலி ஒன்னு, ‘சா..வு..லு...’ன்னு சத்தமா குரல் குடுக்க, குரல் வந்த திசையில் கையை ஆட்டி வைத்தான்.
 
" மாப்ள ! கைய உள்ள வையி. எல்லாரையும் அப்புறம் பார்த்துக்கலாம் "ன்னு சொல்லி, கண்ணாடிய லேசாக ஏத்திவிட்டான், நசீர்.
 
அவன் வீடு இருக்கும் தெருவில் வண்டி நுழைய, அவன் வீட்டின் முன். கல்யாண வீடு என்று சொல்லாமலே தெரியும் அளவுக்கு பத்து வீடு அடைக்கும் வரை பந்தல் போடப்பட்டிருந்தது. வண்டி பந்தலில் நுழைந்து, வீட்டின் வாசல் முன்னால் நின்றது. சேட்டு வேண்டுமென்றே இரண்டு முறை ஹார்ன் அடிக்க, வாசற்கதவு பரப்பரப்பாக திறந்தது.
 
சாகுலின் அம்மா, வாசற்படி நிலை அருகே கண்களின் அழுக தயாரான கண்ணீருடன் நிற்க, திறந்த கதவை சாத்தாமலே அம்மாவை நோக்கி ஓடினான்.
 
" ம்மா ! " என்று அம்மாவை கட்டிக்கொள்ள
 
" முத்துவாப்பா ! " என்று மகனை செல்லப்பெயரில் அழைத்து, அதற்கு மேலே பேசமுடியாமல், வாஞ்சையுடன் கட்டிக்கொண்டார்கள். இருவரின் கண்ணில் இருந்தும் நெகிழ்ச்சியான நீர்.
 
சின்ன பிள்ளையில் அம்மாவை அனைத்துக்கொள்ளும்போது ஒவ்வொரு முறையும்இருந்த அதே கதகதப்பு, அதே வாசனை, அதே அரவணைப்பு, உருகிப்போனான் சாகுல். அவனை உச்சிமோந்து, பின்னர் நெஞ்சுக்குழியில் அழுத்தமாக முத்தம் குடுக்க, அனைத்து கவலையும் நொடியில் பறந்துவிட்ட ஒரு தைரியம் வந்தது. அணைத்தப்படியே அவனை உள்ளே அழைத்து சென்றாள், விசாரிப்புகளுடன்.
 
" எப்புடி வாப்பா இருக்கே ? ஏன் இப்பிடி இளைச்சுப்போய்ட்டே ! ஒழுங்கா சாப்புடாமா என்ன செய்ற " எத்தனை சுத்து பெருத்து வந்தாலும், சொல்லும் வழக்கமான வசனம்தான். பதிலுக்கு அவனும்,
 
" நீ எப்பிடிம்மா இருக்கே ! டாக்டர்ட்ட போனியா ? மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிட்றியா ? " என்ற விசாரித்தான். அதுக்குள்ள மாப்பிள வந்தாச்சுன்னு செய்தி பரவ, கல்யாணத்திற்கு வந்த விருந்தாளியெல்லாம் தூக்கம் கலைந்து வந்து, கட்டிப்பிடி, குசலம் விசாரித்தல் என்றானது. ப்லெசரில் வரும்போது இருந்த தூக்கமெல்லாம் பறந்துவிட்டது.
 
இதற்கிடையில், நசீர் பொட்டியெல்லாம் தூக்கிட்டு வந்து நடுவீட்டில் வைக்க, எல்லார் பார்வையும் பொட்டிக்கே போனது, போதாதிற்கு வாண்டுகள் எல்லாம் பொட்டி கிட்ட ரவுண்டு கட்ட, அடுத்தது முக்கியமான ‘பொட்டி பிரிக்கும் படலம்தான்’. எல்லாரும் பொறாமையில் வாய்ப்பிளக்கும் அளவுக்கு பொண்ணுக்கு வாங்கியிருந்த பொருளையெல்லாம் காட்டி விட்டு, வாண்டுகள் எல்லாம் பிஸ்க்கோத்து, முட்டாய், சாக்கிலேட்டு, ஆலம்பாலு என்று சிலதை பங்கு போட்டு எடுத்துக்கொண்டு ஓடிய பிறகுதான் அவனை காலைக்கடன் கழிக்கவே விட்டது ‘பாசக்கார’ கூட்டம்.
 
அப்புறம் அம்மாவுடன் தனியாக, ஒரு மணி நேரத்துக்கு மேலே பேசினான். ரகசியமாக எடுத்துவந்த தங்க ‘விஷயமெல்லாம்’ பீரோவுக்கு யாருக்கும் தெரியாமல் பூட்டி வைக்கப்பட்டது. கூடவே ரூவாயாக மாத்தப்பட்ட சிலதிர்ஹம்களும், அஞ்சு சைபர்கள் போட்டபெரிய தொகைக்கான டி.டி. எல்லாம் சின்ன லாக்கருக்குள் பூட்டப்பட்டது. அதற்குள்மணி ஒன்பதை நெருங்க, அம்மா அவனை குளிக்க சொன்னாள்.
 
கல்யாணத்துக்காக புதிதாக கட்டின ரூமில் உள்ள பாத்ரூமில் குளிக்க சொல்ல, முடியாது என்று அடம்பிடித்து கொல்லையில் உள்ள பைப்படியில் ‘ஜில்லென்று’ குளித்தான். குளித்தபின், உடை மாத்திக்கிட்டு வர, பசியாற தடபுடலாகபல மாதிரி வகையிறாக்கள் பரப்பட்டு இருந்தது. தலைக்கறி, கோழி சால்னா, புரோட்டா, இடியப்பம், கோழியப்பம், வட்டிலப்பம், கடல் பாசி என்று ஒரு பெருநாள் விருந்தே அவனுக்காக தயாராக இருந்தது. முடிந்தவரை கபளிகரம் செய்து விட்டு, தயாரா தச்சி வச்சிருந்த வெள்ள கைலிய வெள்ள சட்டை, கோல்ட் ஃப்ரேம் ரேபான் கண்ணாடிய மாட்டிக்கிட்டு, புதுசா வாங்கியிருந்த டி.வி.எஸ் 50 எடுத்துக்கிட்டு கூட்டாளிகளை பார்க்க கிளம்பிட்டான். வாசலுக்கு போனவனிடம்,
 
" வெளியே ரொம்ப சுத்தாம, சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு. புது மாப்பிள ரொம்ப நேரம் வெளிய இருக்கக்கூடாது. மதியானத்துக்கு, பெரிய மீனு வாங்கி வச்சிருக்கேன், யார் வீட்லயும் சாப்ட போயிடாத " என்று செல்லமாக எச்சரிக்கை செய்தாள்.
 
" அதெல்லாம் வேணாம்மா ! மொழுதனி ரசம் வச்சி, கருவாடு வறுத்துரு. ரொம்ப நாளாச்சு சாப்ட்டு " என்று சொல்லிவிட்டு கிளம்பினான். என்ன வளர்ந்தாலும், என் புள்ள இன்னும் அப்பிடியேதான் இருக்கான்னு நெகிழ்ச்சியோட அவன் போறதையே பார்த்துக்கிட்டு இருந்தாங்க.
 
கூட்டாளிகள போய் பார்த்துட்டு, வாங்கிட்டு வந்த சிகரெட்டு பாக்கெட்டையெல்லாம் குடுத்துட்டு, கேரம் போர்டு ஆடிட்டு அரட்டை கச்சேரி தான். மதியம் அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வர,அவசரமா வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு ’கூட்டாளி க்ளப்புக்கு’ வந்தான். வந்தவனை அப்பிடியே பள்ளிவாசல் அருகே இருந்தே கேணிக்கு தள்ளிக்கொண்டு போனது நண்பர்கள் கூட்டம். வேணாம்னு மறுத்தவனை பழைய கைலி ஒன்னை குடுத்து கட்டிக்கச்சொல்லி, பின்னர் பாசி படிந்த அந்த கேணியில் தள்ளியது. ஜில்லென்ற (பாசி படிந்த)‘பச்சைதண்ணி’யில்குதித்தவுடன், தயக்கம் மறந்து நீச்சலடிக்க ஆரம்பித்தான். கைலியை உப்பலாக, உள்ளே அரை நிர்வாணமாக குளிக்கும் சுகமே தனி என்று நினைத்துக்கொண்டான். ஆசைத்தீர ரெண்டு மணி நேரத்திற்கு மேல் குளித்துவிட்டு வெளியே வரும்போது ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டு இருந்தது. மொத்த கூட்டமும் அருகில் இருந்த சலாமத் டிஃபன் செண்டரில் நுழைந்தது. நீச்சலடித்த களைப்பில், பசி கிள்ளி எடுக்க, எல்லாரும் கொத்துப்புரோட்டாவ ஒரு பிடிப்பிடித்தார்கள். ஏற்கனவே, வயிறு ரொம்ப இருந்ததால், சாகுல் மட்டும் ரெண்டு ரொட்டியை பிச்சிப்போட்டு, சால்னாவை அதற்கு மேலே ஊற்றி, கூடவே மஞ்சை கரு சிதையாமல் அதன் மேல் உப்பு, மிளகு தூவி ஆஃப்பாயிலோட, அவனுக்கு எப்போதும் பிடித்த வகையில் சாப்பிட்டான்.
 
இப்பிடியே கிட்டதிட்ட ஆறு நாட்கள் அரட்டை கச்சேரியும், கல்யாண வேலையுமாக ஓடியது.
திருமண நாள், வீடே களைக்கட்டியது, வீடு முழுக்க மல்லிகை தோரணமாக தொங்கவிட்டிருக்க, நாகூர் ஹனிஃபா பாட்டு - ஜெனரேட்டர் ஓடும் சத்தத்தை மீறி, மைக் செட்டில் ஊருக்கே கேட்கும் படி பாடிக்கொண்டிருக்க, உறவினர்கள் வேலை பரப்பரப்பில் பம்பரமாக சுத்திக்கொண்டிருக்க, மாப்பிள்ள சாகுல் மட்டும் தன் அறையில் தூங்க முயற்சி செய்துக்கொண்டிருந்தான், அப்பதான் ராத்திரியில் கண்முழிக்க முடியும்னு ’அனுபசவாலிகள்’ அறிவுரையின் பேச்சைக்கேட்டு. ஆனால் தூங்க முடியாமல் தவித்தான், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு போதுக்கூட இப்பிடி ஒரு பதட்டம் இல்லை. மாமன் மகள் நிசா தான் கல்யாணப்பெண் என்றாலும், கல்யாணத்திற்கு முன் அவளிடம் பார்க்க, பேசக்கூட விடவில்லை எல்லாரும் சேர்ந்து. அவனை விட நாலு வயசு சின்னவள், வயசுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒன்னா விளையாடிட்டு இருந்தாலும், அதற்கப்புறம் வெறும் குரலை மட்டும்தான் கேட்க முடிந்தது. ஃபோட்டாவில் அப்புறம் பார்த்துக்கிட்டாலும், ராத்திரிக்கு அவளை எப்பிடி எதிர்கொள்றதுன்னு படப்பபிலயே இருந்தான். அனுபவசாலி கூட்டாளி எல்லாம் ஆளுக்கோரு யோசனை சொல்லி, அவனை மேலும் பீதியாக்கினார்கள். ரொம்ப கேட்டால் நையாண்டியாவே பதில் வர, அதுக்கு மேல கேட்காம விட்டுட்டான்.
 
மதியம் சில பெரிய சட்டிகளில் மேல் நெருப்பை அள்ளிப்போட்டு, தம் பிரியாணி வேக, இன்னும் சில தேக்சாவில் கத்திரிக்கா, மாங்கா, உருளைக்கிழங்கு, வாழக்காயோடு முக்கியமா ஆட்டிறச்சி எல்லாம் போட்ட தால்ச்சா தயாராகிக்கொண்டிருந்தது. கூடவே பொறிச்ச கோழி, வெங்காய தயிர் பச்சடி, கத்திரிக்கா புளிப்பு பச்சடி, தக்காளி - முந்திரி பருப்பு - கிஸ்மஸ் பழம் எல்லாம் கலந்த இனிப்பு பச்சடி என்று அட்டகாசமான விருந்து தயாரானது.


பின்னர் விருந்தை ஊரே வெளுத்து வாங்க, மாப்பிள்ள மட்டும் திங்க முடியாமல் தவித்தான். சாயந்தரமா மாப்பிளக்கு மருதாணி வச்சி, மாலையிட்டு, அம்மாவும் சில சொந்தங்களும் கண்ணிர் விட,பெண் வீட்டிற்கு ஊர்வலமா செய்ய தயாரானான். குதிரை மேலேற்றி, திருமுல்லைவாசல் தப்ஸ் அடித்து அமர்க்களமாக கிளம்பினான்.

ஊரே வேடிக்கை பார்க்க காட்சி பொருளாக ஊர்வலம் சென்றது ரொம்ப கூச்சமாக இருந்தது, குதிரை மிரண்டு கீழே தள்ளிவிடுமோ என்ற பயம் வேறு. பந்தலில் உட்கார்ந்திருவர்கள் எல்லாம், ரோஸ்மில்க்கை குடித்துக்கொண்டே அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவழியா நல்லவிதமா பெண் வீட்டை அடைந்தான். மாமனார் பால் குடுத்து, இன்னொரு மாலை போட்டு, கையில் மோதிரம் போட்டு வரவேற்று, உள்ளே அழைத்துக்கொண்டு போனார். ரெண்டு மாலைகளின் கனம் தாங்காமல், இன்னும் பணிவானைப்போல, மேலும் குனிந்து நடந்தான். முறைப்படி நிக்காஹ் முடிந்து, முகத்தை முழுதாக முடியபடி பெண்ணை அவன் அருகில் உட்கார வைத்தார்கள். மச்சான், மச்சினிகளின் பரிகாசப் பாடலோடு - ரோஜா, கல்கண்டு, பாதாம் பருப்பு தூவி சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ரெண்டு பேரையும் முதலிரவு அறைக்குள் தள்ளினார்கள்,பதினோரு மணியளவில்.
 
பூ அலங்காரம் அறை முழுக்க செய்திருந்தது, அதில் கட்டிலே மறைந்துப்போய் இருந்தது. ஏற்கனவே மாலை, செண்ட்டு, அத்தர், என்று ‘மணங்களால்’ மூச்சு முட்டியது. மாலைகளை அவசரமாக கழட்டி சட்டை மாட்டியில் மாட்டினான், பின்னர் போய் கட்டிலில் உட்கார்ந்துக்கொண்டான். நிசா மட்டும், உள்ளே தள்ளியபோது எங்கே நின்றாளோ அங்கயே இன்னும் நின்றுக்கொண்டிருந்தாள்.அப்பத்தான் ‘மரமண்டையில்’ உறைத்தது, சாகுலுக்கு.
 
" நிசா "
 
" ......... " (வெறும் காத்துதான்)
 
" இங்க வாயேன் ". ம்ஹும், அசைவில்லை !
 
எப்பிடி இவ்வளவு நகையும் பட்டுப்புடவையும் கட்டிக்கிட்டு, மாலைய வேற மாட்டிக்கிட்டு நின்னுக்கிட்டே இருக்கா ? எழுந்திருச்சு போய் கூட்டிட்டு வரலாமா ? எப்பிடி ஆரம்பிக்கிறது ?
 
மெதுவாக எழுந்திரிச்சு போய் தைரியமா தோளில் கை வத்தான், புடவையின் ஊடே சின்ன அதிர்வை உணர முடிந்தது. தேரை நகர்த்துவது போல லேசாக நகர்த்திக்கொண்டு வந்து கட்டிலில் உட்கார வைத்தான். மாலையை கழட்டி, அவன் மாலையோடு சேர்த்து வைத்து விட்டு, மீண்டும் கட்டிலுக்கு வந்து, அவள்முகத்தை மூடியிருந்த புடவை தலைப்பை லேசாக தூக்கிவிட்டான். ஆனால் முகத்தை அவள் கீழ் நோக்கியே வைத்திருந்தாள். தாடையில் கைவைத்து மேலே தூக்கினான், நிமிர்ந்தவள் மீண்டும் குனிந்துக்கொண்டாள். மீண்டும் இவன் தூக்க, கண்ணை மட்டும் கீழ்நோக்கி பார்த்துவிட்டு,முகத்தை நேராக வைத்திருந்தாள்.
 
அப்பத்தான் அவள் முகத்தை முழுசாக பார்த்தான். என்ன ஒரு அழகு, சின்ன வயதில் சுமாராக தான் இருந்தாள் ஆனால் பல வருஷம் கழித்து நேரில் பார்க்கும்போது வனப்பு கூடியிருந்தது. அவகிட்ட நெருங்கி உட்கார்ந்தான்,
 
" நிசா ! எப்பிடியிருக்கே ? " (முட்டாள்த்தனமா கேட்டுட்டமோ?!)
 
தலையை ஆட்டினாள்
 
" ஏன் ஒன்னுமே பேச மாட்டேங்குறே ? " (அடேய் ! நீயே இப்பத்தாண்டா பேசுற.. )
 
" சின்னப்பிள்ளையில, போடா வாடான்னு எவ்வளவு பேசுவ. அப்பிடி எதாவது பேசேன், நான் உன் மச்சான் தானே, என்ன வெக்கம் " என்று சொல்லிமுடிப்பதற்குள்.
 
" போடா , வாடா " புன்சிரிப்புடன் கிசுகிசுப்பாக சொன்னாள்.
 
திகைத்துவிட்டான், சுதாரித்துக்கொண்டு " இதான் மொத மொத என்கிட்ட பேசுற வார்த்தையா. இன்னிக்கே மரியாதை தேஞ்சுப்போச்சு, போவ போவ அடியெல்லாம் உழும் போல இருக்கே !"




க்ளுகென்று சிரித்துவிட்டாள். (அப்பாடா, இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தியாச்சு)
 
சிரித்துக்கொண்டு லேசாக அவனை அன்னாந்து பார்த்தாள், அவனும் அவள் கண்ணை பார்த்து ஸ்தம்பித்துப்போனான். என்னா அழகு, என்னா கண்ணு, கண்ணை சுற்றி இட்டிடுருந்த மையின் நடுவே,கருவிழியால் நொடியில் ஊடுருவிய பார்வை அவனை என்னவோ செய்ய, சட்டென்று மீண்டும் குனிந்துக்கொண்டாள். எப்பிடி இவ்ளோ அழகா ஆவுனா, ஃபோட்டாவுல பார்த்தாலும் மனசுல சின்ன வயசுல பார்த்த உருவம்தான் இருந்திச்சு. ஆனா இப்ப அப்பிடியே வேற ஒரு பொண்ணு மாதிரி ஆயிட்டாளே. கொஞ்சம் கொஞ்சமாக மாமன் மகள் என்ற உணர்வு மறைந்து, வேறொரு பெண்ணாக அவளின் மீது ஈர்ப்பு அதிகமானது.
 
அருத பழசான யுக்தியாக இருந்தாலும் அவனுக்கு அது முதல் அனுபவமாக இருந்ததால், அவள் கையை பிடித்து மருதாணியப் பார்த்தான்.
 
" நல்லா இருக்கே, யாரு போட்டுவுட்டா ? "ன்னு கேட்டுக்கிட்டே அவள் பதில் சொல்வதற்குள் பிடித்திருந்த கையில் முத்தம் குடுத்தான்.
 
அவள் வெடுக்கென்று கையை விலக்க, அவள் விரலில் இருந்தமோதிரம் அவன் வாயில் லேசாக கீறியது.
 
" ஸ்ஸ் ஆஆ " என்று வலிப்பதாக சத்தம் குடுத்தான்.
 
பதறிப்போனாள், " என்னங்க என்னாச்சு ?" முதல் முறையா குரல் வெளிவந்தது.
 
" இங்கப்பாரு வாயில கீறிடிச்சு " என்று உதட்டை பிடித்துக்கொண்டு அவளிடம் காட்டினான். அவள் நெருங்கி முகத்தை அவனருகே கொண்டுப்போக, சடாரென்று அவள் முகத்தை எட்டி முத்தம் பதித்தான்.மூக்கிலா உதட்டிலா என்று சரியா தெரியாமல் முதல் முத்தத்தை குடுத்துவிட்டான். கொஞ்சம் நிலைக்குலைந்தவளாக நகர்ந்து போய் நின்று,
 
" ச்சீ ! இதுக்குதான் கூப்பிட்டிங்களா ! " என்றாள் மீண்டும் குரலை கிசுகிசுப்பாக்கி
 
கிசுகிசுப்பான குரல் மேலும் அவனை கிக்காக்கியது, அவனும் எழுந்து நின்று அவள் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவளை கட்டிப்பிடிக்க, அவள் திமிற, உடம்பில் போட்டிருந்த நகையெல்லாம் அவனை குத்தியது. ‘ஸ்ஸ் ஆஆ’ என்று கத்திக்கொண்டு அவனே விலகினான். அவளுக்கு சிரிப்பு வந்தது,
 
" நிசா ! நீயே நகையெல்லாம் கழட்டு. நான் ஒன்னு ஒன்னாகழட்ட ஆரம்பிச்சாவிடிஞ்சிரும். இப்ப நகையெல்லாம் போடனும்னு யாரு கேட்டா "ன்னு லேசா கடுப்பானான்.
 
அவளோ கழட்டாமல் நிக்க, ஆனது ஆகட்டும் என்று இந்த முறை அவளை பின்னாலிருந்து கட்டிப்பிடித்தான். அவள் எதிர்ப்பதற்குள், அறைக்கதவு தட்டப்பட்டது. ஓடிப்போய் கட்டிலில் உட்கார்ந்துக்கொண்டான், ‘வெவஸ்த்த கெட்டவனுங்க, இந்த நேரத்தில் வந்து கதவ தட்டுறானுங்க’ன்னு மனசுக்குள் கருவினான்.
 
நிசா சிரித்துக்கொண்டேபோய் கதவை திறந்தாள், வெளியே அவளின் சில தோழிகளும், சாகுலுக்கு மச்சினி முறையில் சில பெண்களும் நின்றுக்கொண்டு இருந்தார்கள். எல்லாரும் வாசலில் நின்றபடியே, சாகுலை பரிகாசம் செய்தார்கள்.
 
" என்ன மச்சான் ! சரியான நேரத்துல வந்துட்டமா ? ” என்று கிண்டாலாக கேட்க.

“ இல்ல தூங்கப்போனேன், அதான்.....” ன்னு வழிந்தான்.

“ என்னது, தூக்கம் வருதா.. சரி சரி, நீங்க தூங்குங்க... நிசாவ நாங்க எங்கக்கூட படுக்க வச்சிக்கிறோம் " என்று எல்லாரும் ஒரு குரலில் சொல்லாத குறையாக சிரித்தப்படி சொல்ல, சாகுலுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் விழித்தான். மனசுக்குள் ’நெசமாவே கூட்டிட்டு போறாங்களா’ன்னு ஒரு படப்படப்பு வேற, அது மூஞ்சியில் நல்லாவே தெரிய.
 
" இங்க பாருடி மச்சான் பயந்துபோய்ட்டாரு ! ஏண்டி நிசா என்னடி பண்ண, மச்சான் அதுக்குள்ள பயந்துப்போயிருக்காரு "ன்னு அந்த கூட்டத்தில் ஒருத்தி சொல்ல, சாகுல் இளித்தான்.
 
" கொஞ்சம் நேரம் பொறுங்க மச்சான், புடவைய மாத்திட்டு வந்து விட்டுறோம் " என்று மூத்த வயதாக இருந்த ஒருத்தி சொன்னாள். அப்பாடா, என்று தெளிவான தைரியத்தில் சாகுல்,
 
" அப்பிடியே, இந்த நகையெல்லாம் கழட்டிருங்க " என்று சத்தமாக அவர்களிடம் சொல்லியேவிட்டான்
 
பெரிதாக எல்லாரும் சிரிக்க, அதில் ஒருத்தி
 
" ஏன் மச்சான் ! கண்ட இடத்துல குத்திரிச்சா ? அப்ப நகைய மட்டும் கழட்டுனா போதுமா, இல்ல..." என்று முடிக்காமல் குறும்பாக கேட்க, எல்லாரும் இன்னும் பெரிதாக சிரித்தார்கள்.
 
அவளை நோக்கி நிசா ஒதைப்பேன் என்பது போல கையை காட்டினாள். சாகுலோ, இப்பிடிக்கூட பேசுவாளுங்களா என்பது போல திகைத்து பதில் சொல்ல தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்.
 
" சரி கொஞ்சம் இருங்க, பத்து நிமிஷத்துல கூட்டிட்டு வந்து விட்டுர்றோம், அப்புறம் உங்க பொண்டாட்டிய என்னா வேணா செய்யுங்க " என்று அவர்கள் நிசாவை வெளியே அழைக்க
 
அதற்குள் ஒரு சின்னப்பெண் ஒருத்தி, " நீங்க வர்ற வரைக்கும் நான் வேணா மச்சான் கூட இருக்கவா, சும்மா பேசிட்டுதான் " என்று நிசாவை பார்த்து கண்ணடித்தாள். மீண்டும் எல்லாரும் சிரிக்க,அவளை நிசா தள்ளிக்கொண்டு வெளியேறினாள்.
 
சாகுல் அதிர்ச்சியில் இருந்தான், ’என்னா பேச்சு பேசுறாளுங்க...’ ஓடிப்போய் கதவை மூடினான். கடகடவென மாப்பிள்ள உடையை களைந்து, மாப்பிள்ளை தோழன் பெண் வீட்டில் குடுத்து அறையில்வைக்க சொன்ன பெட்டியில் தயாராக இருந்த புது கைலியும் கைவத்த பனியனும் மாத்திகொண்டான்.
 
அறையோடு ஒட்டியிருந்த குளியலறையில் சென்று சிறுநீர் கழிக்க, ஜட்டியிலிருந்து தண்டை வெளியே எடுத்தான். நுனியில் பிசுப்பிசுப்பாக இருந்தது, ஒரு பிசுபிசுப்பு புள்ளியாக வேறு, தண்டு நுனிப்படும் இடத்தில் இருந்தது. சாகுலுக்கு சற்று ஆச்சிர்யம்தான், ஒன்னுமே ஆரம்பிக்கல அதுக்குள்ள ஈரமாயிடுச்சேன்னு. சிறுநீர்கழித்துவிட்டு, நன்றாக சோப்பு போட்டு தண்டை கழுவிவிட்டு,ஜட்டியை கழட்டி காய்ந்திருந்த பகுதியில் தண்டிலிருந்து ஈரத்தை சுத்தமாக துடைத்துவிட்டு, ஜட்டியை அங்கயே போட்டுவிட்டு வெளியே வந்தான்.
 
பெட்டியில் இன்னும் சில ஜட்டிகள் இருந்தது, யோசித்தவன் இந்த நேரத்துல எதுக்கு ஜட்டின்னு அப்பிடியே அவளுக்காக காத்திருந்தான். ஐந்து நிமிடம் போன பிறகு, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது, வேகமாக ஓடிப்போய் கதவை திறந்தான், அப்பிடியே இன்ப அதிர்ச்சியில் உறைந்தான். நிசாவிற்கு பாவாடை (மெலிதான) தாவணி உடுத்தி, உடம்பில் மொத்தம் நாலே நகைகளோடு, கையில் பாதாம் பால் குவளையுடன், சுண்டி இழுப்பதாக நின்றிருந்தாள். எங்கே ‘எழுந்திருச்சிருமோன்னு’ தொடையை ஒட்டிக்கிட்டு நின்றான்.
 
கூட வந்தவள், " மச்சான் ! இந்தாங்க நிசாவ கொண்டு வந்து விட்டுட்டோம், இனிமே உங்க பாடு " என்று சிரித்து நிசாவை உள்ள தள்ளி, கதவை அவளே சாத்தி விட்டாள். நிசா கதவை பூட்டிவிட்டு,இந்த முறை தயக்கம் நீங்கியவளாக நேராக சாகுலிடம் வந்தாள், பாதாம் பால் குவளையை அவனிடம் நீட்ட, அதை வாங்கி மெதுவாக குடித்துக்கொண்டே அவளை ரசித்தான்.
 
வெண்மையான் நிறம், அளவான தேகம், அளவுக்கொள்ளாத முன்னழகு, தாவணியில் தெரிந்த மடிப்பில்லாத வழுவழுப்பான இடுப்பு, உதட்டில் மாறாத புன்சிரிப்பு. வெண்மையான அவளின் நிறத்திற்கு மருதாணி கை, காலையெல்லாம் செக்க செவேலென்று காட்டியது. வெட்கத்துடன் அவளின் அசைவுகளில் இருந்த நளினம், அவனை இன்னும் ஈர்த்தது.

தலையில் வைத்திருந்த மல்லிகை வாசனை அறை முழுக்க பரவ, பால் குவளையை பாதியிலேயே வைத்து விட்டு சட்டென்று அவளை கட்டிப்பிடித்தான். இந்த முறை அதை எதிர்ப்பார்த்தவள் போல திமிறாமல் இருந்தாள். ‘ ஒழுங்கா ஒத்துழைக்கனும்னு பெரிசுங்க யாராவது சொல்லிக்குடுத்துருப்பாங்க போல ’ன்னு நினைச்சுக்கிட்டான். ஆனால்,
 
" கொஞ்ச இருங்க மச்சான் என்ன அவசரம் " ஸ்ஸ் என்று நாக்கை கடிந்துக்கொண்டவள் மீண்டும் " கொஞ்சம் பொறுங்க" என்றாள்
 
" ஏன் நிசா, மச்சானே சொல்லு. நான் உனக்கு மச்சான் தானே" என்றான்
 
" வாப்பாவுக்கும் உம்மாவுக்கு தெரிஞ்சா ஏசுவாங்க " என்றாள்
 
" சரி, ரூமுக்குள்ள மட்டும் மச்சான்னு சொல்லு " என்று சொல்லிக்கொண்டே இழுத்து அணைத்தான். அவள் மூச்சு அவன் முகத்தருகே வேகமாக புஸுபுஸு வந்தது. தாவணியின் ஊடே பூப்பந்துகள் அவன் மார்பில் உரசியது.
 
" கொஞ்ச இருங்க.. ம.ச்..சா.ன், விளக்கை அணைச்சிட்டாவது வர்றேன்" என்று தன்னை திமிறி விடுவித்துக்கொண்டவள், நகர்ந்து லைட்ட அனைக்க போக, அவள் பாவாடையில் அசைந்த பின்னழகை ரசித்தான். அவள் பின்னாடியே சென்று, அவள் விளக்கை அணைத்து, விடி விளைக்கை போட்ட நொடியில் அவளை பின்னாலிருந்து கட்டிப்பிடித்தான். அவள் ‘ஆவ்’ என்று பயந்தவாரு லேசாக கத்த,

" கத்திராத" ன்னு சொல்லி தன் தண்டை அவள் புட்டத்தில் அழுத்துமாறு உரசினான். மெலிதான கைலியின் வழியே, வழுவழுப்பான அவளின் பாவடையின் ஸ்பரிசம் தண்டில் பட்டதும், புது வித உரசல் சுகம் கிடைத்ததில், தண்டு இன்னும் விரைப்பானது.
 
அப்பிடியே அவள் இடுப்பில் கைவைத்து, தாவணியின் ஊடே கையைவிட்டு வயிற்றை லேசாக பிசைந்தவாறு, கையை மேலே நகர்த்தி கனிகளை பிடிக்க போக, தக்கென்று கையை பிடித்தாள்.
 
" வேணாம் மச்சான், உடம்பெல்லாம் கூசுது "
 
" என்னது வேணாமா, கதை கெட்டுச்சு போ " என்று அவளை தள்ளிக்கொண்டு கட்டில் அருகில் வந்தவன், அவளை தள்ளிவிட்டவாறு அவளோடு சேர்ந்து சாய்ந்தான். பின்பக்கமாக இருந்தவளை தன் பக்கம் திருப்பி கட்டிப்பிடித்துக்கொண்டான், அவளும் ஒத்துழைத்து கட்டிப்பிடிக்க, இருவரும் முதல் முறையாக பரஸ்பரம் உடலை முழுதாக உணர்ந்தார்கள். விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவள் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் இன்னும் அவனை உசுப்பேத்தியது, இந்த முறை வாயோடு வாய் வைத்து மெதுவாக ஆனால் அழுத்தமாக முத்தம் பதித்தான். அவளுக்கு கூச்சமாக இருந்தாலும், சௌகரியம் ஆகிவிட்டவள் போல ஒத்துழைத்தாள். தாவணியை உருவிப்போட்டான், அவளின் மார்புகலசங்கள் இரண்டும் ஜாக்கெட்டின் வழியாக அவன் மார்பில் குத்தியது. தன்னுடைய பனியனையும் அவசரமாக கழட்டி வீசி எறிந்தான்.
 
ஒருவொருக்கொருவர் நேராக பார்த்தபடியே படுத்திருக்க, அவள் கழுத்தில் முத்தம் குடுத்து, பின்னர் மெதுவாக கீழறங்கி ஜாக்கெட்டோடு அவள் மார்பில் வாய் வைத்தான். விலக எத்தனித்தவளை முதுகில் அணைத்துக்கொண்டான். சற்று நேரத்தில் அதன் இன்பத்திற்கு பழகியவள் போல ஒத்துழைத்தாள், பின்னர் இன்னொரு கனியை கையால் பிசைந்தான். அவள் அந்த நிலையில் இருக்குபோதே அவசரமாக ஜாக்கெட்டு ஊக்கை கழட்டினான், உள்ளே அவள் பிரா அணியவில்லை. தயார் செய்து தான் அனுப்பி இருக்கிறார்கள்.
 
ஜாக்கெட்டை முழுதாக கழட்டாமல், ரெண்டு மார்பு பந்துகளும் பக்கவாட்டில் ஒன்றோடொன்று உரசி நிக்க, அவனுக்கு வசதியாக ரெண்டு மார்க்காம்புகளையும் ஒரே நேரத்தில் சுவைக்க முனைந்தான்.அவளுக்கோ முதல் அனுபவமாக, நாக்கு பட்டவுடன் கூடி விலகிச்சென்றாள், அவள் விடாது மெதுமெதுவாக அழுத்தி சுவைத்து அவளுக்கு அந்த இன்பத்தை பழக்கப்படுத்திக்கொண்டிருந்தான்.அதேநேரம் கீழே பாவாடையை காலால லேசாக மேலேற்றி, தன் ஒருகால் முட்டியை அவள் காலிடுக்கில் சொருகினான். அவள் மெதுமெதுவாக தொடையை விலக்கி குடுக்க, முட்டியால் சொர்க்க வாசற்கதவை அடைந்தான். கைலியை அவசரமாக இழுத்துக்கொள்ள, வெறும் முழங்கால் அவளில் முக்கோணத்தில் கச்சிதமாக முட்டியது. ஆட்டுக்கல்லை போல காலை ஆட்ட, முதல் முறையான வேறொரு தோலின் ஸ்பரிசத்தில் கிளர்ச்சி அடைந்தாள். முட்டியை அவள் பிசுபிசுப்பு நனைத்தது, அதை தெரிந்துக்கொண்டவன் தாமத்திக்காமல் ஒரு கையை எடுத்து முக்கோணத்தில் கொண்டு போனான். முட்டியை எடுத்துவிட்டு கையை அங்கே வைக்க, அவளோ அவன் கையை தொடையிடுக்கில் வைத்து நசுக்கினாள். அவள்உணர்ச்சி பெருகுவதை புரிந்துக்கொண்டவன், வாயால் மார்பு பந்துகளை சுவைக்க ஆரம்பித்தான். இப்போது அவள் முனங்க ஆரம்பிவிட்டு இருந்தாள்.
 
இதுதான் சமயம் என்று அறிந்தவன் அவளை மல்லாக்க கிடத்தினான், அவனும் எழுந்து நின்று கைலியை இடுப்பு வரை உயர்த்தி கட்டிக்கொண்டான். விடி விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம்,உணர்ச்சியில் உதட்டை சுழித்தவாறும், கண்கள் மேல் சொருகிய நிலையில், மூச்சு வேகமாக விட்டுக்கொண்டு, குட்டிபோட்ட பூனை மாதிரி லேசாக ஒலி எழுப்பிக்கொண்டிருந்தாள். கையால் அவள் முக்கோணத்தை தேய்த்துக்கொண்டே இருந்தவன், அவள் அருகே தன் இடுப்பை கொண்டு சென்று, சரியான சமயம் என்று காலை விரித்து, தன் தண்டை அவளின் பிளவின்உள்சொருக முயற்சித்தான்.நுனியை வைத்து மேலும் கீழுமாக கோடு மாதிரி போட்டான், அவளே தன் காலை இன்னும் நன்றாக விரித்தாள், பலம் கொண்டவனாக உள்ளே சொருக, பாதிவரை உள்ளே சென்றது. ‘ஹக்’... என்று வலியோடு முனங்கினாள், மீண்டும் பாதி வெளியே எடுத்து, ஒரு அழுத்தாக அழுத்த, கிட்டத்திட்ட முழுதும்(முக்கால்வாசி) உள்ளே போய்விட்டது.
 
உடனே, தன் இடுப்பை ஆட்ட ஆரம்பித்தான், முதலில் வலியால சற்று நேரம் துடித்தாள், அவன் அடிக்க அடிக்க, நீர் இன்னும் சுரக்க சுரக்க, வலி இன்ப முனகலாக மாறிற்று. முனகலுக்கு ஏற்ற மாதிரி இவன் இடுப்பை இன்னும் ஆட்ட, அவள் சுரப்பிகள் இன்னும் சூடாகி, உள்ளே அவளுக்கு கொழகொழப்பாக ஆக்கியது. சூட்டிலும் கொழகொழப்பிலும் தாங்காத தண்டு, தன் நீரை கக்க தயாராகி,சடாரென சுடுநீரை கெட்டியாக அவளுக்குள் செலுத்தியது. வெளியாகும்போது, தன் இடுப்பை அவள் இடுப்போடு சேர்த்து ஒட்டிக்கொண்டான். இனிதாக முதலிரவு நிறைவேறியது.
 
பிறகு அடுத்த நாளெல்லாம் இதே வேளைதான், சாப்பாடு - சாமான் போடு ; சாப்பாடு - சாமான் போடு என்று பல நாட்கள் ஓடியது. இடையில் ஒருமுறை அவன் ஆசைக்காக அவளுக்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும், நிர்வாணமாக ஒரு போர்வைக்கும் இருவரும் கட்டிப்பிடித்து தூங்கினார்கள். இன்னொரு முறை அவள் குளித்துக்கொண்டிருக்கும்போது, எதோ எடுக்க வேண்டும் என்று ஏமாற்றி, உள்ளே நுழைந்து - உள்ளே நுழைத்துவிட்டான். இப்பிடியாக இன்பமாக கழிந்துக்கொண்டிருந்த நாட்கள், லேசாக துன்பம் ஆரம்பிக்க இருந்தது, அவன் ஊருக்கு போகும் நாள் நெருங்க நெருங்க.
 
இன்னும் ஒரு வாரமே இருக்க, அவள் கெஞ்சாத குறையாக போக வேண்டாம் என்று அழுதாள். இன்னும் ரெண்டே வருஷத்தில் முடித்துவிட்டு திரும்பி வந்துவிடுவேன், அதோடு ஊரிலேயே இருந்துவிடுகிறேன் என்று சமாதானப்படுத்தினான். கிளம்பும் கடைசி நாளன்று ஆக்ரோஷமான புணர்வும், முடிந்தபின் பின்னர் அழுகையுமாக ஆனது. அவனுக்கும் மனதில்லை என்றாலும், சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனை துரத்தியது.
 
ஏர்ப்போர்ட்டில் எல்லாரும் வழி அனுப்பி வைக்க, எப்போதும் அம்மாவின் அழுகையை மட்டுமே பார்த்து இருந்தவனுக்கு, மனைவி நிசாவின் அழுகை வாரக்கணக்கில் மனதில் ஓடியது. மாத மாதம்தபால் எழுதி பேசிக்கொள்வதுதான் ஆறுதல், எப்பயாவது ஒரு தடவை ஃபோன் உள்ள வீட்டிலோ அல்லது போஸ்ட் ஆஃபிஸிலோ சென்று பேசிக்கொள்வார்கள். ஆறுமாதம் இப்பிடியே ஓடிவிட்டது ஆனால் நிசாவால் இன்னும் சமாதானம் அடைய முடியவில்லை.

திடீரென்று ஒரு முறை அம்மாவிடம் இருந்து தபால் வந்தது, நிசாவை பற்றி குறைகளாக அடுக்கி இருந்தது. வீட்டில் இருப்பதில்லை, காரை எடுத்துக்கிட்டு நாகூர் போறேன்னு கடல்கறைக்கும் போறதும், நாகப்பட்டினம் போய் துணி வாங்கப்போறேன்னு ஊர் சுத்துறதும், நீ அனுப்புற பணத்தையெல்லாம் முழுசா செல்வழிச்சிட்டாள்ன்னு பட்டியல் போட்டு இருந்தாள். சாகுல் அதிர்ச்சி அடைந்தான், பாசமான அம்மா, ப்ரியமான மனைவி மீது பழிசுமத்தும்போது, யாரை நம்புவது. ஃபோனில் நிசாவை கேட்டப்போது, அப்பிடி இல்லை என்று அழுதாள். ஏன்கிட்டமாமி ஒன்னுமே சொல்லலையே, உங்கக்கிட்ட மட்டும் ஏன் தப்பு தப்பா சொல்றாங்கன்னு அழுதா. அம்மாவிடம் கேட்க முடியாது, வேற யார்கிட்டேயும் இத சொல்லக்கூடாது, கொஞ்சம் பொறுத்து போன்னு சொல்லி சமாதானப்படுத்தினான்.
 
அடுத்தமுறை தபாலில் அனுகுண்டாக வந்தது, ’நாவல் போடுறவன், நாகூர் கூட்டிட்டு போறவன்னு யார் யாரோ பசங்க வந்து வீட்ல அவகிட்டபேசிக்கிட்டே இருக்கானுங்க, நான் அவள அவங்க வாப்பா வீட்டுக்கே அனுப்பி உடப்போறேன்னு’ எழுதியிருந்ததை பார்த்து நிலைக்குலைந்துப்போனான். நிசாவிடம் கேட்டால் துடித்து போய்விடுவாள், என் பொண்டாட்டிய பத்தி எனக்கும் தெரியும்.

அம்மா ஏன் இப்பிடி எழுதுறாங்க ? அடுத்த ஆள பத்தி தப்பாக்கூட பேச மாட்டாங்க, ஏன் இப்பிடி எழுதுறாங்கன்னு குழம்பி போனான். வேலையே ஓடவில்லை, போதாதிற்கு ரூமில் வேறு கடுப்பேத்தினார்கள், ‘நம்ம பொண்டாட்டி ஒழுங்கா இருந்தாலும், ஊர்ல காலிப்பசங்க திரியிரானுங்க. வேனும்னே தப்பு தப்பா சொல்லி விட்டுருவானுங்க. நம்ம ஆளுகளும் விசாரிக்காம ஒன்னுன்னா ஒம்பதா கதை கட்டி விட்டுருவாங்க’
 
என்ன செய்வதென்றே புரியவில்லை, துபாய்க்கு அவளை கூட்டிவந்தால், வருகிற சம்பளத்தில் கட்டுப்படியாகாது. இதற்கு ஒரே வழி, அம்மாவுக்கு தபால் எழுதினான், அடுத்த மாதம் ஊரோடு வந்துவிடுவதாகவும், இருக்கிற சேமிப்பில் எதாவது யாவரம் பண்ணிக்கிறேன்னு எழுதி அனுப்பிவிட்டான். தபாலை பார்த்தவுடன் சாகுல் அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம், விஷயத்தை நிசாவிடம் சொன்னார்கள், புருஷன் வர்றதுக்கு சந்தோஷப்படுவதா இல்லை தன்னை பற்றி தப்பாக சொன்னதற்கு வருத்தப்படுவதா என்று நிசாவிற்கு புரியவில்லை.
 
அவள் முகத்தை வைத்தே யூகித்துவிட்டார் நிசா மாமியார், அவளை அருகில் அழைத்து,
 
" நீ ஏன் வருத்தமா இருக்கேன்னு புரியுதும்மா ! நான் உன்னை பத்தி தப்பா சொன்னேன்னு தானே " என்றவர்களை ஒன்னும் சொல்லாமல் பார்த்தாள் நிசா. தொடர்ந்து,
 
" உன் புருஷனை பிரிஞ்சு நீ எவளோ கஷ்டப்படுறேன்னு எனக்கு தெரியும், ஏன்னா நானும் உன்னை மாதிரி கஷ்டப்பட்டவ தான். சாகுலோட வாப்பா இருவது வருஷமா மலேசியாவில வேல செஞ்சிட்டு இருந்தாரு. மூனு வருஷத்துக்கு ஒரு தடவதான் லீவுல வருவாரு, ஒவ்வொரு தடவையும் இந்தா போய் முடிச்சிட்டு வந்துர்றேன், முடிச்சிட்டு வந்துர்றேன்னு சொல்லி சொல்லியே இருவது வருஷம் இருந்து கடைசியிலே அவுகளே முடிஞ்சுப்போயி ஐசுப்பொட்டியில தான் வந்தாக " என்று சொல்லும்போது வெடித்துவிட்டாள்.
 
" மாமி.... " நிசா தன் மாமியர் கையை பிடித்துக்கொண்டாள். மாமியார் தொடர்ந்தார்,
 
" என்ன மாதிரி, நீயும் உன் புருஷனை பிரிஞ்சு வாழனும்னு அவசியம் இல்ல. யார் சொல்லியும் கேட்காம சாகுலு திரும்ப போய்ட்டான், முடிச்சிட்டு இப்ப வர வாய்ப்பே இல்லை, ஏன்னா இப்பத்தான் பொண்டாட்டி பிள்ளைக்கு வேனும்னு அதிகமா சம்பாதிக்கிற ஆசை வரும். அதை இங்க சம்பாதிச்சிட்டு போவலாம், அதுக்குதான் இந்த அதிர்ச்சி வைத்தியம். ஆம்பிளங்களுக்கு சில சமயம் சொன்னா புரியாது,பொம்பள பேச்ச கேட்க மாட்டாங்க, எல்லாம் கெட்டதுக்கு அப்புறம் கடைசியாத்தான் ஒத்துக்குவாங்க.
 
சாகுல, நானும் ஆரம்பத்துலேயே போவ வேணாம்னு சொன்னேன் ஆனா எல்லா பயலுவலும் போவும்போது தானும் போவனும்னு ஆசப்பட்டான், நான் தடுக்கல. கல்யாணத்துக்கப்புறம் போவ வேணாம்னு நான் சொல்லி பார்த்துட்டேன், புது பொண்டாட்டி உன் பேச்சையும் கேக்கல. எனக்கு வேற வழி தெரியாமத்தான்மா இப்பிடி செஞ்சேன். என்ன எம்மேல கொஞ்ச நாளு கோவமா இருப்பான்,அவ்வளவுதானே, ஆனா உன் கூட சேர்ந்து ஒன்னா வாழுவான்ல.
 
புருஷன் பொண்டாட்டி ஒரே இடத்துல ஒன்னா தான்மா வாழனும், அதான் அவங்களுக்கும் நல்லது, பொறக்ககிற பிள்ளங்களுக்கும் நல்லது. சாகுலுக்கு அவங்க வாப்பா மேலே ஒட்டுதலே இல்லாம போயிறிச்சு, பிள்ளையும் புருஷனும் அந்நியமா இருக்கிற வலி பொம்பளைக்கு தான்மா தெரியும். அது உனக்கு வரவேனாம், நீயாவது நல்லா வாழனும் " என்று சொல்லி முடிப்பதற்குள்
 
" மாமி, என்ன மன்னிச்சிருங்க, உங்கள தப்பா நினைச்சுட்டேன் " என்று கதறிக்கொண்டு மாமியாரை கட்டிப்பிடித்துக்கொண்டாள் நிசா.
 
அரவணைப்பாக தன் மருமகளின் தலை வருடிக்கொடுத்து, " போய் சந்தோஷமா இரு, சீக்கிரம் ஒரு பேரனோ, பேத்தியோ பெத்துக்குடு. அப்புறம் எல்லாருமா சேர்ந்து கப்பலுக்கு ஒன்னா போவலாம் "என்று சிரித்தாள், நிசாவும் தான்.
 
-நிறைவு
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved