மழை இப்படி வேகமாக அடித்து பெய்ய ஆரம்பிக்கும் என நான் சிறிதும் நினைக்கவில்லை, சென்னை தீவு திடலில் நடைபெற்று கொண்டிருந்த இண்டீயர் எக்ஸ்டீரியர் கண்காட்சியை பார்த்துவிட்டு நிறைய pamplets களை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்து அந்த சனி கிழமைமாலை பொழுதில் என் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன், என்றாவது ஒரு நாள் ரம்மியமாக கிடைக்கும் சென்னை climateஐ அனுபவிக்க வேண்டும் என்பதால் நடந்து வந்துகொண்டிருந்தேன்... அப்பொழுது தான் மழையில் நன்றாக நனைந்து விட்டேன், முழுக்க நனைந்ததால்பையை கொண்டு தலையை மூடிகொள்ள விரும்ப வில்லை.