ஹைதராபாத்.
வானத்து நட்சத்திரங்கள் பூமியில் இருக்கும் மக்களை பார்த்து கண் சிமிட்டியது. மேகங்கள் அலை, அலையாக நட்சத்திரங்களை மூட பார்த்தது. ஹைதராபாத் புழுதி இல்லாமல் இருந்தது. சாலைகள் மிகவும் நேர்த்தியாக இருந்ததது.இந்த மாநகரத்தின் போக்குவரத்து மிகவும் அதிகமாகி இருந்தது. இதெயெல்லாம் தான் தங்கி இருக்கும் ஹோட்டல் ரூமி பால்கனியில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் சுனிதா. எதிரே ஒரு பெரிய சினிமா பேனர் இருந்தது. சிரஞ்சீவியும், திரிஷாவும் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.
அன்று காலையில் அருண் அவளையும், கவிதாவையும் ஒரு பார்ட்டிக்காக ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு கூட்டிப்போயிருந்தான்.