என் பெயர் பிரேம் குமார். எல்லாரும் என்னை ஆசையாக பிரேம் என்றுதான் கூப்பிடுவார்கள். என்க்கு சொந்த ஊர் மதுரை. நான் சென்னையில் ஒரு அயல் நாட்டு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறேன். தனியாக ஒரு மேன்ஷனில் 5000 ரூபாய் வாடகை கொடுத்து தங்கி இருக்கிறேன். என் வீடு வசதியானது என்பதால் என் சம்பளத்தை யாரும் எதிர் பார்ப்பது இல்லை. எனவே என் செலவு போக மாதம் 30000 ருபாய் பேங்கில் போட்டு விடுவேன்.
வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது என் குறிக்கோள்.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் நான் வெள்ளிக்கிழமை தோறும் பாருக்கு போய் விடுவேன். அங்கே 2 பாட்டில் பீர், மூடு இருந்தால் கொஞ்சம் விஸ்கி சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்து படுத்து விடுவேன்.
அன்றும் அப்படிதான் போயிருந்தேன். அன்று ஏனோ தெரியவில்லை, பார் காலியாக இருந்தது. மணியைப் பார்த்தேன்.