சித்தப்பாவிடமிருந்து அழைப்பு வர சிவா திருச்சிக்கு புறப்பட்டுப் போனான். சென்னையிலிருந்து வந்திருந்த சித்தப்பா சிவாவின் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உத்தரவை கையோடு வாங்கிக்கொண்டு வந்திருக்க சிவாவின் உற்சாகம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.
“என்னடா சிவா. நான் இருக்கிற வரைக்கும் கவலைப்படாதேன்னு சொன்னேன்ல. அதே மாதிரி வேலையும் வாங்கிட்டு வந்துட்டேன். அடுத்த வாரமே நீ பீஹாருக்கு போகனும் ட்ரைனிங் அங்கதான் போட்டிருக்காங்க” என்றார் சித்தப்பா சுந்தரம்.
“பீஹாருக்கா. இங்கேயே எதுவும் கிடையாதா சித்தப்பா. எனக்கு ஹிந்தியும் தெரியாது. அங்கே போயி என்ன பண்றது”