அவள் என் எதிரே வந்து நின்றாள். "என் பெயர் விஜயகுமாரி. என்னை நீ விஜி என்றே கூப்பிடலாம். அது சரி. உன்னைப்பற்றி சொல்" என்றாள்.
"என் பெயர் பிரேம் குமார். என்னை நீங்கள் பிரேம் என்றே கூப்பிடலாம்." என்றேன்.
"இரண்டு பேரும் தண்ணி சாப்பிட்டீர்களா? உணவு ஏதாவது சாப்பிட்டீர்களா, இல்லையா?"
"அவர் விஸ்கி சாப்பிட்டார். நான் வெறும் பீர் மட்டும்தான் சாப்பிட்டேன். உணவு சாப்பிடும் முன்தான் இவரை இங்கே அழைத்து வரும் வேலை வந்து விட்டதே" என்றேன்.
அவள் உள்ளே போய் ஒரு கொத்து சாவிகளை கொண்டுவந்து கொடுத்தாள்.