தனது அறையின் தனிமையில் படுக்கையின் மென்மையான கதகதப்பில் அவள் நிர்வாணமாகப் படுத்திருந்தாள். அறைச் சன்னலுக்கு வெளியே தெரிந்த இரவு வானத்தில் அங்கங்கே சில நட்சத்திரப் பொத்தல்களும், மையமாய் வட்ட ஓட்டையாய் இருந்த நிலவும் தெரிந்தது. அன்றைய இரவெல்லாம் அவளுக்குத் துணை அந்த நிலவு தான். அவன் இன்னும் வரவில்லை. இன்று வருவானா. தெரியாது. அவள் தன்னுடலை நீட்டி முறித்து உடலெல்லாம் பொங்கும் காம இச்சையில் தனக்குள்ளாகவே ஏதோ முனகிக் கொண்டாள். அவளின் உடலின் ஒவ்வொரு அசைவுக்கும், மனதில் எழும் ஒவ்வொரு எண்ண அலைக்கும் ஒரு காரணம் இருந்தது -