அன்று எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கிட்டியது. ஆம், கிட்டத்தட்ட, 5 வருடங்களின் பின் கல்லூரியில் என்னுடன் கூடப் படித்த மோகனை தற்செயலாக மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தது.
படிக்கும் காலத்தில் அவனை எல்லாரும் தீக்குச்சி மோகன் என்று தான் கூப்பிடுவார்கள். காரணம், அவ்வளவு ஒல்லியாக நெடுநெடுவென்று இருப்பான். அத்துடன் வெட்கம் வேறு. ஆகவே அவனை எந்தப் பெண்ணும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால், படிப்பில் படுசுட்டி. அதனாலே அவனை எனக்கு மிகப் பிடிக்கும். படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது தெளிவு படுத்துவான். சொல்லப் போனால், கல்லூரியில் அவனுடன் பேசிப் பழகும் ஒரே பெண் நானாகத் தான் இருப்பேன்.
அந்த மோகனை 5 வருடங்களின்பின் பார்த்தது மனதில் மகிழ்ச்சியைத் தந்தது. அதைவிடவும் அவனது தோற்றம். ஒல்லியாக இருந்த அவன் வேண்டியளவு சதை போட்டு அண்ணாந்து பார்க்கும் உயரத்துடன் ஆண்மையின் அடையாளமாக இருந்தான்.
படிக்கும் காலத்தில் அவனை எல்லாரும் தீக்குச்சி மோகன் என்று தான் கூப்பிடுவார்கள். காரணம், அவ்வளவு ஒல்லியாக நெடுநெடுவென்று இருப்பான். அத்துடன் வெட்கம் வேறு. ஆகவே அவனை எந்தப் பெண்ணும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால், படிப்பில் படுசுட்டி. அதனாலே அவனை எனக்கு மிகப் பிடிக்கும். படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது தெளிவு படுத்துவான். சொல்லப் போனால், கல்லூரியில் அவனுடன் பேசிப் பழகும் ஒரே பெண் நானாகத் தான் இருப்பேன்.
அந்த மோகனை 5 வருடங்களின்பின் பார்த்தது மனதில் மகிழ்ச்சியைத் தந்தது. அதைவிடவும் அவனது தோற்றம். ஒல்லியாக இருந்த அவன் வேண்டியளவு சதை போட்டு அண்ணாந்து பார்க்கும் உயரத்துடன் ஆண்மையின் அடையாளமாக இருந்தான்.