நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசி மேலை நாட்டின் நாகரீகத்தின் தாக்கத்தை நடை, உடை, பாவனை, உணவு பழக்கத்தில் காட்டி அல்லல் பட்டு கொண்டு இருப்பவள் தான் இருபத்தினாலே வயதான மதுமிதா என்ற மம்தா. நெறி கெட்ட வாழ்கையின் விளைவாக பிறந்தவள் தான் மம்தா. தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்ற பழமொழிக்கு உதாரணம் நம் மம்தா தான். அவள் அம்மா என்ன என்ன வாழ்கையில் பண்ண கூடாதோ, அவ்வளவு கெட்ட செயல்களை பண்ணி அந்த பலனால் பிறந்தவள் தான் மம்தா. ஆறே மாத திருமண வாழ்கை தான் மம்தாவுக்கு. அம்மா பெண் குணங்களை அறிந்தவுடனேயே, மம்தாவின் கணவன் விலகி போய்விட்டான். ஓர் அப்ற விசயத்துக்காக அம்மாவும் பெண்ணும் சண்டையிட்டுக்கொண்டு தனி தனியாக வாழ்கிறார்கள்.