வெங்கடேசனின் வீடு ஈரோடு பெரியார் நகரில் இருந்தது. மொட்டை மாடியில்
நின்றபடி, அதிகாலையின் சில்லென்ற காற்றில் லயித்திருந்த அவரது காதுகளில்,
ரயில்வே நிலையத்தின் ஒலிபெருக்கியில் அறிவிப்பு ஒன்று செய்யப்பட்டுக்
கொண்டிருந்தது நன்றாகக் கேட்டது. அவர் முகத்தில் ஒரு ஆர்வம் கலந்த புன்னகை
மலர்ந்தது.