நான் ராமநாதபுரம் ஜில்லாவில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்.
எப்படியோ ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வேலைக்கு தேட வந்தேன்.
முதலில் ஒரு மேன்ஷனில்தங்கி இருந்து, பல இடங்களில் வேலை தேடி ஒரு நல்ல
கம்பனியில் மெக்கானிக்காக வேலைக்கு சேர்ந்துவிட்டேன். நான் தங்கி
இருக்கும் மேன்ஷனுக்கும், கம்பனிக்கும் வெகு தூரம் என்பதால், எப்படியோ
சிரமப்பட்டு கம்பனியின் அருகிலையே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன். அந்த
குடியிருப்பு ஒரு கூட்டு குடும்பம் போல பார்பவருகி இருக்கும்.
விசுவின் வியட்நாம் காலனி படத்தில் வருவது போல, ஒரு பழைய பண்ணை வீட்டை
ஒவ்வொரு ரூமையும் ஒரு குடும்பத்துக்கு வாடகைக்குவிட்டு சம்பாதிக்கும்
வீட்டு ஒனர். ஒவ்வரு ரூமிலும், ஒரு சின்ன அடுப்படி இருக்கும்,
அவ்வளவுதான், பாத்ரூம், கக்கூஸ்எல்லாம் காமன். ஒரு இரண்டு பாத்ரூமும்,
மூன்று கக்கூசும் இருக்கும். முதல் இரண்டு நாட்கள் மிகவும்
கஷ்ட்டபட்டேன்.