“வீணா வீட்டில தங்கிக்கடா” என்றார் அப்பா.
வீணா ஒரு தூரத்து உறவில் அத்தை. ஆனால் எங்கள் குடும்பத்தோடு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தவராம். வெளியூரில் செலவில்லாமல் தங்கி, வீட்டு சாப்பாட்டை சாப்பிட்ட மாதிரியும் ஆயிற்று, உறவை புதுப்பித்த மாதிரியும் ஆயிற்று என்ற விவரமான தமிழ்க் கலாசாரத்தின் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு வீணா மாமி வீட்டிற்கு போனேன்.
அழைப்பு மணி கேட்டு, கதவைத் திறந்து, என்னைப் பார்த்து, மலர்ந்த வீணா மாமிக்கு வயது 40 இருக்கலாம். ஆனால் பளிச்சென்று இருந்தார்கள்.
.jpg)