Pages

கிராமத்துக் காதல்

ஆணழகன் என்றால் அது முருகன் தான். அழகு அவன் பெயரிலேயே ஒட்டிக் கொண்டுள்ளது.

அந்த அழகை குத்தைகைக்கு எடுத்துக் கொண்டது, அந்த கிராமம். அந்த ஊர் மக்களின் விருப்பத் தெய்வமும் முருகன் தான்.

பசுமை போர்த்திய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
இருக்கும் அந்த கிராம மக்களின் கிராமத் தெய்வமான முருகன் மலை உச்சியில் தான் குடி கொண்டுள்ளான்.

சூது வாது அறியாத மக்கள் இயற்கையோடு ஒட்டி வாழப் பழகிக் கொண்டவர்கள். மலை மேல் உள்ள முருகனை வழிபட்டுத்தான் எந்த நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள்.