நான் பெருமாள் கோவிலில்
பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அப்போது என் அருகில் பிரார்த்தனை
செய்துகொண்டிருந்த ஒரு பையனிடம் எதிவரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு மாமி, "ஏன்டா ரகு நீ டியூஷனுக்கு போகவில்லையா?" எனக் கேட்டாள்.
அவன் "இல்லை மாமி, அங்கே என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்,
சும்மா
அங்கே போனா ஹோம் வொர்க் மட்டும் பண்ணச் சொல்லிவிட்டு டீச்சர் விட்டுடுறாங்க
நாங்களும் அதைச் செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடவேண்டியிருக்கு வேறே
ஒன்னும் அங்கே அதிகமா சொல்லித்தரதில்லை டீச்சரும் என்ன தான் செய்வாங்க ஒரே
சமயத்தில் 6 -ஆம் கிளாஸிலிருந்து 10 -ஆம் கிளாஸ் வரை ஸ்டூடன்ஸ் வந்தால்
யாருக்கு என்ன சொல்லித்தர முடியும் அங்கே போவது வேஸ்ட் என் எண்ணி நின்னுட்டேன்
மாமி. கணக்கு சொல்லித்தர ஒரு நல்ல டியூஷன் மாஸ்டர்
கிடைக்கனும்ம்னு தான் பெருமாளை வேண்டிண்டு இருக்கேன் மாமி" என்றான் அந்தப்
பையன்.