ராஜா எனக்கு ஒரு நெருங்கிய நண்பன். இம்முறை விடுமுறையை அவன் தோட்டத்து வீட்டில் கழிக்க என் பெற்றோரிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். ரயில் ஏறி சென்று சேலத்தை வந்தடைந்தேன். ராஜா எனக்காக ஸ்டேஷனில் காத்திருந்து. என்னை அழைத்து சென்றான். அவன் வீட்டுக்கு சென்றவுடன் வேலைகாரர்கள் வந்து என் பெட்டியை எடுத்து சென்று உள்ளே எங்கள் ரூமில் வைத்தனர். அப்போது ராஜாவின் அத்தை காபிக் கொண்டுவந்து கொடுத்தாள். ராஜா தன் அத்தையிடம் சரியாக பேசவில்லை, மூஞ்சியை தூக்கிக்கொண்டிருந்தான். நான் அவங்களையும் எங்களுடன் காப்பி அருந்தச் சொன்னேன். அவங்களும் எங்களுடன் காப்பி அருந்திக்கொண்டு என்னுடன் நன்றாக பேசினாங்க. பின் நானும் ராஜாவும் பம்புசெட்டில் குளிக்க சென்றோம்.