Pages

மணிமாறன்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இருப்பவன் தான் மணிமாறன். திருடுவதே அவன் தொழில். பலமுறை போலீசில் மாட்டிகொண்டு கம்பி எண்ணி இருக்கிறான். இதனால் அவனுக்கு பல போலீஸ்காரர்களை நன்கு தெரியும். பொதுவாக மணிமாறன் திருட போவதற்கு முன்னால் நிறைய விசயங்கள் சேகரிப்பான். ஒரு வீட்டில் திருட கணக்கு பண்ணி விட்டால் , அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியிடம் நைசாக பேச்சு கொடுத்து விழயத்தை வாங்கி விடுவான். அப்படி சேகரித்த பின், மணிமாறன் மடிபக்கதில் இருக்கும் ஒரு வீட்டில் திருட முடிவு பண்ணினான். அவன் சேகரித்த படி, அந்த வீட்டில் ஒரு முப்பத்தி ஆறு வயது ஒருத்தி இருக்கிறாள். அவள் கணவன் வளைகுடா நாட்டில் வேலை பார்கிறான். விசா கிடைக்கததால், அவளால் போக முடியவில்லை. துணைக்கு ஒரு வேலைக்காரியை வீட்டோடு இருக்க சொல்லி இருக்கிறாள். நல்ல வசதி. ஒரு தனி வீடு.சகல வசதிகளும் உண்டு.