Pages

பரமுவின் பரந்த மனசு

மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்தும் எழில் கொஞ்சும் இயற்கை அன்னையின் கருணையுடன் பச்சை பசுமையுடன் விளங்கும் அந்த பொள்ளாச்சி நகர் கோடியில் அழகு கொஞ்சம் விலாசமான வீட்டின் எஜமானி தான் இந்த பரம கல்யாணி. நெல்லை மாவட்டடத்தில் பிறந்து திருமணம் ஆனபின் கொங்கு நாட்டுக்கு வந்து தன்னுடைய தயாள குணத்தால் அருகில் இருக்கும் அனைவருக்கும் உதவி புரிந்து கொண்டு இருப்பவள். இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி அளித்து அவர்கள் மன மகிழ்வோடு செல்வதை பார்த்து பார்த்து பரசவமடைவாள்.